அமைச்சர்களுடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர்.
சித்தாலேப நிறுவனத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற நிகழ்வில் கடந்த ஐனவரி மாதம் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர்.“சித்தாலேப ” நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வடமாகாண முன்பள்ளி சிறார்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தார்.
நாவலர் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் நாடளாவிய ரீதியில் சித்தாலேப நிறுவனத்தால் முன்பள்ளி சிறார்களிடையே ஒவியப் போட்டிகள் நடாத்தப்பட்டு மாகாண மட்டத்தில் பரிசில்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 2012 ம் ஆண்டுக்கான போட்டியிலும் வடமாகாண முன்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்ற போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்பள்ளி சிறார்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி பணப்பரிசில்களையும் வழங்கி மகிழ்வித்தார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற தியாகி அறக்கொடை நிறுவனத்தின் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் திஸ்சகரலியத்த

தென்னிலங்கையில் நடைபெற்ற எமது உதவி வழங்கும் நிகழ்வில் மறைந்த முன்னால் அமைச்சர் டாக்டர். ஜெயலத் ஜெயவர்த்தன அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.

ஜக்கியதேசியகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய அவர்கள் கலந்துக்கொண்ட எமது உதவி வழங்கும் நிகழ்வு

அமைச்சர் பெ.சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோர் எமது கட்டிட திறப்பு விழாவில்.
0 Comments